உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

திண்டுக்கல்லில் பா.ஜ.க உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-07-05 07:10 GMT   |   Update On 2022-07-05 07:10 GMT
  • தமிழகம் முழுவதும் தி.மு.க அரசை கண்டித்து இன்று பா.ஜ.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
  • திண்டுக்கல்-திருச்சி ரோடு கல்லறை மேடு பகுதியில் மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் தி.மு.க அரசை கண்டித்து இன்று பா.ஜ.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்-திருச்சி ரோடு கல்லறை மேடு பகுதியில் மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பெட்ரோல்ட-டீசல் விலையை குறைக்கவேண்டும்.

கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கவேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும். தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொலை, கொள்ளை, கற்பழிப்பை தடுக்கவேண்டும். மாணவ-மாணவிகளின் கல்விக்கடனை ரத்து செய்யவேண்டும்.

மணல் கொள்ளையை தடுக்கவேண்டும். குடும்ப தலைவியின் மாத உரிமைத்தொகை ரூ.1000 உடனடியாக வழங்கவேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கவேண்டும்,

இளைஞர்களை சீரழிக்கும் போைத பொருட்களை தடை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கபெருமாள் சிறப்புரையாற்றினார். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News