தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு கேடயம்
- தமிழக அரசின் சுகாதார திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த மருத்துவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
- அமைச்சர் கீதாஜீவன் பாராட்டினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் உலக மருத்துவர்கள் தின விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.
கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் பொற்செல்வன் வரவேற்றார்.
விழாவில், அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்டத்தில் தமிழக அரசின் சுகாதார திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த மருத்துவர்க ளுக்கு பாராட்டு கேடயம் வழங்கினார்.
இதில், தூத்துக்குடி மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளர் குமரன், கோவில்பட்டி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா, மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குநர் முருகவேல் நன்றி கூறினார்.