உள்ளூர் செய்திகள்

தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் எலி பேஸ்ட் சாப்பிட்ட மாணவி சாவு

Published On 2022-06-29 09:58 GMT   |   Update On 2022-06-29 09:58 GMT
  • நிவேதா குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்தால் கடும் மனவேதனை இருந்தார்.
  • பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை நிவேதா உயிரிழந்தார்.

மாரண்டஅள்ளி,

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அமானி மல்லாபுரத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகள் நிவேதா (15). இவர் அமானி மல்லபுரம் அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்.

கடந்த 20-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் நிவேதா குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்தால் கடும் மனவேதனை இருந்தார்.

கடந்த 21-ம் தேதி நிவேதா எலி பேஸ்ட் சாப்பிட்டார். பின்னர் இதுகுறித்து தனது தாயார் ஷர்மிளாவிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த நிவேதிதா வின் தாய் உடனடியாக மாரண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

இதனை அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News