உள்ளூர் செய்திகள்

கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பம்.

திருச்செந்தூர் கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பம்

Published On 2022-08-16 08:57 GMT   |   Update On 2022-08-16 08:57 GMT
  • மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடற்கரையில் மணல் சிற்பம் செய்யப்பட்டிருந்தது.
  • மணற்சிற்பத்தை செந்தூர் பசுமை இயக்க செயலாளர் ஜெயக்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

திருச்செந்தூர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் பசுமை இயக்கம் சார்பில் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மணல் சிற்பம் செய்யப்பட்டிருந்தது.

மணற்சிற்பத்தை செந்தூர் பசுமை இயக்க செயலாளர் ஜெயக்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். பின்னர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடை பெற்றது. இதில் திருச்செந்தூர் பசுமை இயக்கம் சார்பில் தலைவர் அருணாச்சலம், துணை தலைவர் சங்கர வடிவேல், பொருளாளர் கணேஷ் குமார் மற்றும் தமிழக மாணவர் இயக்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News