உள்ளூர் செய்திகள்

நாசரேத் பிரகாசபுரம் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-07-14 08:43 GMT   |   Update On 2023-07-14 08:43 GMT
  • பேரணி பள்ளியில் தொடங்கி நாசரேத் பஸ் நிறுத்தம் வரை நடந்தது.
  • மாணவ, மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

நாசரேத்:

நாசரேத் நகரில் அமைந்துள்ள பிரகாசபுரம் ஜேம்ஸ் மெமோரியல் மேல்நிலை பள்ளியில் 'பசுமையை நோக்கி' என்ற தலைப்பில் பசுமையை காப்பது, மரங்களை நடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. எஸ்.டி.ஏ. பள்ளிகளின் தெற்கு மண்டல ஆய்வாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.

பேரணியை நாசரேத் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பள்ளியில் தொடங்கி நாசரேத் பஸ் நிறுத்தம் வரை நடந்தது. இதில் மரங்களை நடுவோம் மழை பெறுவோம், மரங்களை வெட்டாதீர், பசுமை யை காப்போம் போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்ற னர். பேரணியில் சப்-இன்ஸ்பெ க்டர்கள் ராய்ஸ்டன், வை குண்டதாஸ், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொ ண்டனர். பள்ளி முதல்வர் எட்வின் சாமுவேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News