உள்ளூர் செய்திகள்

தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2022-09-09 09:45 GMT   |   Update On 2022-09-09 09:45 GMT
  • விபத்து ஒன்றில் சண்முகசுந்தருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு அவரது காலில் பிளேட் வைக்கப்பட்டது.
  • விபத்தில் அடிபட்டதில் இருந்து கடந்த சில வாரங்களாக அவருக்கு வலி அதிகமாகிக் கொண்டே இருந்தது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் முனியா ண்டவர் காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தர் (வயது 45 ) ஆட்டோ டிரைவர்.

இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் சண்முகசுந்தருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவரது காலில் பிளேட் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் விபத்தில் அடிபட்டதில் இருந்து கடந்த சில வாரங்களாக அவருக்கு வலி அதிகமாகிக் கொண்டே இருந்தது.

இதனால் மன வேதனை அடைந்த சண்முகசுந்தர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகசுந்தர் உடலை மீட்டு பிரதி பரிசோத னைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News