உள்ளூர் செய்திகள்

வாலிபர் மீது தாக்குதல்

Published On 2022-10-07 10:04 GMT   |   Update On 2022-10-07 10:04 GMT
  • தனசேகரன் பணத்தை கொடுத்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
  • தனசேகர் அவரிடம் கேட்டபோது தான் மறந்து விட்டதாக கூறினார்.

சேலம்:

சேலம் வீராணம் அருகே உள்ள சின்னனூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 53). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையில் அயோத்தியப்பட்டணம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (37) நேற்று வந்து பொருட்களை வாங்கிக் கொண்டு பணத்தை கொடுத்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது தனசேகரன் அவரது பையில் பார்த்தபோது கடலை எண்ணெய்க்கு மட்டும் பணம் தராமல் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தனசேகர் அவரிடம் கேட்டபோது தான் மறந்து விட்டதாக கூறினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தனசேகர் மற்றும் அவரது நண்பர்கள் ஆனந்தை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஆனந்த் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் வீராணம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News