உள்ளூர் செய்திகள்

வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி- திசையன்விளையில் 11-ந் தேதி தொடங்குகிறது

Published On 2022-08-08 09:46 GMT   |   Update On 2022-08-08 09:46 GMT
  • 11-ந் தேதி (வியாழக் கிழமை) முதல் நாள் ஆண்கள் பிரிவு போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்கிறார்.
  • 12-ந் தேதி (வெள்ளிக் கிழமை) ஆண்களுக்கான போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பனும், பெண்களுக்கான போட்டியை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைக்க உள்ளனர்.

திசையன்விளை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 14-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை 4 நாட்கள் நடக்கிறது

11-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் நாள் ஆண்கள் பிரிவு போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்கிறார். பெண்கள்களுக்கான போட்டியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்க உள்ளார்.

12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆண்களுக்கான போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பனும், பெண்க ளுக்கான போட்டியை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைக்க உள்ள னர். இதில் அமைச்சர் மனோதங்கராஜ் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

13-ந் தேதி (சனிக்கிழமை)ஆண்கள் பிரிவிற்கான போட்டியை அமைச்சர் தங்கம் தென்னரசு, பெண்க ளுக்கான போட்டியை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தொடங்கிவைக்க உள்ளனர்.

14-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) ஆண்கள் பிரிவு போட்டியை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து வெற்றிபெற்ற அணிகளுக்கு தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பேசுகிறார்.

கபடி போட்டியை 5 ஆயிரம்பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மைதானத்தில் கேலரி வசதி அமைக்கப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலை வரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்து உள்ளார்

Tags:    

Similar News