உள்ளூர் செய்திகள்
கடிதம் எழுதி வைத்துவிட்டு அரசு ஊழியர் மாயம்
- சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையத்தை சேர்ந்தவர் குமார் இவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார்.
- இவர் கடந்த 4-ந்தேதி ‘கண் காணாத இடத்துக்கு செல்கிறேன், யாரும் என்னை தேட வேண்டாம்’ என வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 33). இவர், சேலத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் கணினி தட்டச்சராக பணிபுரிகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
கடந்த 4-ந்தேதி 'கண் காணாத இடத்துக்கு செல்கிறேன், யாரும் என்னை தேட வேண்டாம்' என வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆத்தூர் ஊரக போலீசார், மாயமான அரசு ஊழியர் குமாரை தேடி வருகின்றனர்.