உள்ளூர் செய்திகள்

கடிதம் எழுதி வைத்துவிட்டு அரசு ஊழியர் மாயம்

Published On 2022-08-11 07:01 GMT   |   Update On 2022-08-11 07:01 GMT
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையத்தை சேர்ந்தவர் குமார் இவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார்.
  • இவர் கடந்த 4-ந்தேதி ‘கண் காணாத இடத்துக்கு செல்கிறேன், யாரும் என்னை தேட வேண்டாம்’ என வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 33). இவர், சேலத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் கணினி தட்டச்சராக பணிபுரிகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

கடந்த 4-ந்தேதி 'கண் காணாத இடத்துக்கு செல்கிறேன், யாரும் என்னை தேட வேண்டாம்' என வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆத்தூர் ஊரக போலீசார், மாயமான அரசு ஊழியர் குமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News