உள்ளூர் செய்திகள்

கட்டையால் அடித்து வாலிபர் கொலை

Published On 2022-07-29 09:58 GMT   |   Update On 2022-07-29 09:58 GMT
  • தன்னுடன் வேலை பார்க்கும் தனது உறவினரான சுரேஷ் என்பவரை அழைத்துக்கொண்டு கடந்த 25 -ம் தேதி தனது வீட்டுக்கு வந்தார்.
  • பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாய்தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் மரக்கட்டையால் சுரேசை தாக்கினார்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே உள்ள சாந்தாங்காடுவெட்டி க்காடு கிராமத்தைச்சேர்ந்தவர் மாணிக்கம். இவர் திருப்பூரி ல்பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தன்னுடன்வேலை பார்க்கும் தனது உறவினரான நாகையை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவரை அழைத்துக்கொண்டு கடந்த 25 -ம் தேதி தனது வீட்டுக்கு வந்தார்.

இந்நிலையி இருவருக்கும் இடையே குடி போதையில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாய்தகராறு ஏற்பட்டது. இதில்மாணிக்கம் ஆத்திரம் அடைந்து மரக்க ட்டையால் சுரேசை தாக்கி னார். இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதையடுத்து மாணிக்கம் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து பட்டுக்கோ ட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரிதிவிராஜ் சவுகான், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News