உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர்

Published On 2022-10-18 08:20 GMT   |   Update On 2022-10-18 08:20 GMT
  • நேற்று கணவன் - மனைவி 2 பேரும் கட்டிட வேலைக்கு சென்று இருந்தனர்.
  • புதுப்பேட்டை போலீசில் கஸ்தூரி புகார் கொடுத்தார்.

கடலூர்:

பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடியை சீனிவாசன் நகரை சேர்ந்தவர்முருகப்பன்-கஸ்தூரிதம்பதியினர்.இவர்களது மகள் கோமதி (வயது 15). இவர் புதுப்பேட்டை பெண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று கணவன் - மனைவி 2 பேரும் கட்டிட வேலைக்கு சென்று இருந்தனர். கோமதிவீட்டி ல்தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைசேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் கோமதியை மயக்கி ஆசைவா ர்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றிபுதுப்பேட்டை போலீசில் கஸ்தூரி புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்நந்த குமார் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட பள்ளி மாணவி கோமதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News