உள்ளூர் செய்திகள்
null
திண்டிவனத்தில் வலிப்பு வந்து உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்
- திடீரென லிங்கம் மயங்கி வலிப்பு வந்து உயிருக்கு போராடினார்.
- லிங்கத்திடம் இருந்த 5000 ரூபாய் பணம் 1/2 தங்க நகையை சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெண்ணம்பூண்டியை சேர்ந்தவர் லிங்கம். இவர் திண்டிவனம் புது மசூதி தெருவில் உள்ள வங்கி வேலை காரணமாகவந்தார். அப்பொழுது திடீ ரென லிங்கம் மயங்கி வலிப்பு வந்து உயிருக்கு போராடினார். அப்போது அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த திண்டிவனம் சப் -இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் சுதாரித்துக் கொண்டு அருகில் இருந்த கம்பியை கொடுத்து காப்பாற்றினார். மேலும் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திண்டி வனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உடனடியாக முதல் உதவி செய்து காப்பாற்றிய திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்து ள்ளனர்.லிங்கத்திடம் இருந்த 5000 ரூபாய் பணம் 1/2 தங்க நகையை சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் உறவினர்களிடம் ஒப்படைத்தார்.