உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் குட்கா பதுக்கிய 5 பேர் கைது

Published On 2022-10-09 05:36 GMT   |   Update On 2022-10-09 05:36 GMT
  • திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் குட்கா கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
  • சின்னாளபட்டி பகுதிகளில் போலீசார் குட்கா கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் குட்கா கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூரில் இருந்து அதிக அளவில் குட்கா திண்டுக்கல் வழியாக தென்மாவட்டங்களுக்கு கடத்தப்படுவது தெரிய வந்ததால் சோதனைச்சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அதன்படி வேடசந்தூர், வடமதுரை, கொடைரோடு, சின்னாளபட்டி பகுதிகளில் போலீசார் குட்கா கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த கண்ணன் (வயது48), அனுமந்தன்நகரை சேர்ந்த வேளாங்கண்ணி (64), வாழக்காய்பட்டியை சேர்ந்த ஜீவக்குமார் (25), கோபால் (40), வடமதுரை வேல்வார்கோட்டையை சேர்ந்த அக்கீம் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 450 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி கூறுகையில், போதை பாக்கு, புகையிலை, குட்கா விற்பது மற்றும் வைத்திருப்பது சட்டபடி குற்றமாகும். இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குட்கா கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 32 குட்கா மூட்டைகளை டி.எஸ்.பி. தனிப்படை போலீசார் மீட்டனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News