உள்ளூர் செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்டில் பணியாற்றும் 400 தன்னார்வலர்கள்

Published On 2022-07-29 09:36 GMT   |   Update On 2022-07-29 09:36 GMT
  • தன்னார்வலர்கள் குழுவில் அதிக வயதுடையவராக ஸ்ரீபிரியா என்பவர் உள்ளார்.
  • தன்னார்வலர்களில் 150 பேர் போட்டி நடைபெறும் இடத்தில் பணியாற்றுகிறார்கள்.

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து உள்ளது.

இப்போட்டி தொடருக்காக 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள்.

தன்னார்வலர்கள் குழுவில் அதிக வயதுடையவராக ஸ்ரீபிரியா என்பவர் உள்ளார். அவருக்கு 55 வயது ஆகிறது. இவர் ஏராளமான செஸ் போட்டிகளில் பணியாற்றி இருக்கிறார். இதுபோன்ற தொடர்களில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார்.

தன்னார்வலர்களில் 150 பேர் போட்டி நடைபெறும் இடத்தில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் வீரர்களின் நடுவர்களுக்கு உதவுவது, வாயில்களை நிர்வகிப்பது, யாராவது மின்னணு சாதனங்களை அரங்கத்துக்குள் கொண்டு வராமல் பார்த்துக்கொள்வது, உணவு மற்றும் பானங்கள் வழங்குவது, பார்வையாளர்களை கையாள்வது ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.

140 தன்னார்வலர்கள் போக்குவரத்து குழுவில் இடம்பெற்றுள்ளார்கள். அவர்கள் வீரர்-வீராங்கனைகளை பயிற்சியாளர்களை போட்டி நடைபெறும் இடத்துக்கு அழைத்து வருவார்கள்.

இது தொடர்பாக தன்னார்வலர்கள் குழுவின் பொறுப்பாளர் பிரதீக் மோகன் கூறும்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தன்னார்வ திட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மாணவர்களை அனுப்ப உள்ளூர் கல்லூரிகள் அகில இந்திய செஸ் கூட்டமைப்பை அணுகினர். இளம் செஸ் வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் என பன்முகத்தன்மையுடன் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கும் தகுந்த உதவித்தொகை, நல்ல உணவு, தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.

எங்கள் குழுவின் சராசரி வயது 22 ஆகும். குழுவின் மூத்த உறுப்பினராக 55 வயது ஸ்ரீபிரியா உள்ளார். அவர் நிறைய செஸ் போட்டிகளில் பணியாற்றியுள்ளார். அவர் இங்கு பணியாற்ற மிகவும் ஆர்வமுடன் இருந்தார். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார்.

Tags:    

Similar News