உள்ளூர் செய்திகள்

ஆதி நாராயணன்


ஆலங்குளத்தில் தோட்டத்தில் பதுக்கிய 30 கிலோ புகையிலை பறிமுதல்

Published On 2022-10-01 09:02 GMT   |   Update On 2022-10-01 09:02 GMT
  • ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளத்தை சேர்ந்தவர் ஆதி நாராயணன்
  • பூலாங்குளத்தில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் ஒரு தோட்டத்தில் புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளத்தை சேர்ந்தவர் ஆதி நாராயணன்(வயது 38). இவர் பூலாங்குளத்தில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் ஒரு தோட்டத்தில் புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது மூட்டைகளில் சுமார் 30 கிலோ எடை கொண்ட புகையிலை பண்டல்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆதிநாராயணனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News