உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரி பகுதியில் மது, லாட்டரி விற்ற 3 பேர் கைது
- ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபகுமார், சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
- அரசு முத்திரையுடன் கூடிய 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபகுமார், சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆறுமுகநேரி பஜார் அருகே மது விற்பனை செய்த கீழ நவ்வலடிவிளையைச் சேர்ந்த இன்பகரன் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து அரசு முத்திரையுடன் கூடிய 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் காயல்பட்டினம் பூந்தோட்டம் அருகே மது விற்பனை செய்ததாக வண்டிமலைச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் (64) என்பவர் கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ஆறுமுகநேரி சிவன் கோவில் அருகே பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இசக்கிமுத்து (60) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 61 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.