உள்ளூர் செய்திகள்
போலீசார் சோதனை

மோசடி வழக்கில் சிக்கியவர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2022-06-04 04:12 GMT   |   Update On 2022-06-04 04:12 GMT
சேலம் கிச்சிப்பாளையத்தில் மோசடி வழக்கில் சிக்கியவர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பிரதான சாலையில் வசித்து வருபவர் நீதிமணி. இவர் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது .

இந்த நிலையில் கிச்சிப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ராஜ்குமார் தலைமையில் போலீசார் வந்தனர். தொடர்ந்து வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம் அங்குலமாக அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த அதிரடி சோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் நடந்த இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News