உள்ளூர் செய்திகள்
ராமேசுவரம், கீழக்கரையில் நாளை மின்தடை
ராமேசுவரம், கீழக்கரையில் நாளை மின்தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற் பொறியாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன்-1 பீடரில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புலிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள், வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.
கீழக்கரை துணை மின் நிலையத்தில் உள்ள காஞ்சிரங்குடி பீடரில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் காஞ்சிரங்குடி, கோரைகூட்டம், கல்லகுளம், செங்கள்நீரோடைஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.
ஆர். எஸ். மடை துணை மின் நிலையத்தில் உள்ள நாகச்சி பீடரில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, குடிசை மாற்று குடியிருப்பு, ஏ.ஆர்.குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர், ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி)அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும். இந்த தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்தார்.
ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் தங்கச்சிமடம் பீடரில் அவசரகால பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (4-ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை செம்மமடம், மெய்யம்புளி, அரியாங்குண்டு, சந்தியாநகர், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற் பொறியாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.