உள்ளூர் செய்திகள்
அரூர் வாணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
அரூர் வாணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
அரூர்,
அரூர் கடைவீதியில் உள்ள ஸ்ரீவாணீஸ்வரி சமேத ஸ்ரீவாணீஸ்வரர் கோவில் பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள்ந டைபெற்றது. நந்திக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், பூக்கள், உள்ளிட்டவற்றை கொண்டு அர்ச்சனைகளும் சிறப்பு அபிஷேகமும்செ ய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து இறைவனை வழிப்பட்டனர். அர்ச்சகர்கள் நாகராஜ், ரகு ஆகியோர் பூஜைகளை செய்தனர். அதே போல் பேருந்து நிலையம் அருகே உள்ள வர்ணீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.