உள்ளூர் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்:
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) ஆகியவற்றின் சார்பில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைத்தலைவர் மோகன் தலைமையில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. 2 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.