உள்ளூர் செய்திகள்
நண்பர்களுடன் சுற்றுலா வந்த போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி வக்கீல் சாவு
நண்பர்களுடன் சுற்றுலா வந்த போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி வக்கீல் பலியானார்.
பென்னாகரம்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த அரும்பட்டு கிராமத்தை சேர்ந்த அஞ்சான் மகன் விஜயகுமார் (வயது 36). வழக்கறிஞர். இன்று தனது நண்பர்களுடன் ஒகேனக்கல்லுக்கு வந்தார். ஒகேனக்கலில் சின்னாறு பரிசல் துறை காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது விஜயகுமார் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து ஒகேனக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதலுக்கு பின்னர் விஜயகுமாரை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.