உள்ளூர் செய்திகள்
சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலாளி கைது
திருப்பூரில் 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பெரியாண்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55) தொழிலாளி. இவர் அப்பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் ராஜேந்திரனை சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் பெரியாண்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55) தொழிலாளி. இவர் அப்பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் ராஜேந்திரனை சிறையில் அடைத்தனர்.