உள்ளூர் செய்திகள்
தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி நினைவு தினத்தையொட்டி அன்னதானம்
தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி நினைவு தினத்தையொட்டி அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி முன்னாள் மாவட்ட தி.மு.க. செயலாளர் என். பெரியசாமியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி போல்பேட்டை உள்ள அவரது நினைவு இல்லத்தில் அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், துணைச் செயலாளர் கீதா முருகேசன், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாணவரணி துணை அமைப்பாளரும் தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா,
பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், நிர்மல்ராஜ், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, கவுன்சிலர்கள் இசக்கி ராஜா, கந்தசாமி, பொன்னப்பன், வட்ட செய லாளர் ரவீந்திரன், கீதா செல்வ மாரியப்பன்,மற்றும் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.