உள்ளூர் செய்திகள்
மது குடிப்பதற்கு பணம் கேட்டு வாலிபர் மீது தாக்குதல்
மது குடிப்பதற்கு பணம் கேட்டு வாலிபர் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நட்டாலம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அனீஷ்குமார் (வயது 30). இவர் நட்டாலத்திலிருந்து நான்கு வழி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கல்லுக்கூட்டம் பகுதியைச் சேர்ந்த காட்வின், எட்வின் மற்றும் சுபின் ஆகியோர் தடுத்து நிறுத்தி மது குடிப்பதற்கு 500 ரூபாய் கேட்டுள்ளனர்.
அனில்குமார் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மூன்று பேரும் அவரை சரமாரியாக கிரிக்கெட் ஸ்டெம்பாலும், கையாலும் தாக்கி உள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த அனிஷ்குமார் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை 3- பேரையும் தேடி வருகின்றனர்.