உள்ளூர் செய்திகள்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் திடீர் போராட்டம்

Published On 2022-05-26 10:47 GMT   |   Update On 2022-05-26 10:47 GMT
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா காலத்தில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இதில் டாக்டர்கள் 40 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர்.

கொரோனா பாதிப்பு குறைந்ததால் இந்த டாக்டர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் முதல் பணியில் இருந்து விடுவிக்க பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து 3 மாதங்கள் இந்த டாக்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

இதனைதொடர்ந்து இன்று காலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு டாக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு விடுபட்டுள்ள 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களிடம் ஆஸ்பத்திரி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதனால் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News