உள்ளூர் செய்திகள்
தேர் திருவிழா நடைபெற்ற காட்சி

நவலடிபட்டி பகவதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா

Published On 2022-05-26 10:45 GMT   |   Update On 2022-05-26 10:45 GMT
நவலடிபட்டி பகவதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா தொடங்கியது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம்  நவலடிபட்டி ஸ்ரீபகவதிஅம்மன் மற்றும் ஸ்ரீஅங்கண்ணன் கோவில் தேர் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

 திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்து பகவதிஅம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்தனர்.

 பின்னர்ஸ்ரீ பகவதிஅம்மனுக்கு 1008 டஜன் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.  தேர் அலங்காரம் செய்யப்பட்டு தேரில் அம்மன் சிலை வைக்கப்பட்டு  திருவீதியுலா நடைபெற்றது.

 அதை தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல்,  அலகு  குத்துதல், கிடா வெட்டு பூஜை நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கிய பிரமுகர்களும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.

Tags:    

Similar News