உள்ளூர் செய்திகள்
ஆபத்தான நிலையில் சாலையோரம் உள்ள பள்ளம்

காவேரிப்பாக்கத்தில் சாலையோரம் ஆபத்தான நிலையில் பள்ளம்

Published On 2022-05-26 10:26 GMT   |   Update On 2022-05-26 10:26 GMT
காவேரிப்பாக்கத்தில் சாலையோரம் ஆபத்தான நிலையில் பள்ளம் உள்ளது.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே ஆபத்தான நிலையில் சாலையோரம் பெரிய பள்ளம் உள்ளது பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஏற்கனவே வாலாஜா டோல்கேட் பகுதியில் இருந்து பெங்களூர் வரை ஆறு வழிச் சாலையாக உள்ளது.

வாலாஜா டோல்கேட் பகுதியில் இருந்து சென்னை வரை நான்கு வழிச்சாலையாக உள்ளது. இந்த சாலை ஆறு வழிச்சாலை ஆக விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

 இதனால் சாலையோரம் ஆபத்தான நிலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது விபத்து ஏற்படும்போது ஒரு எச்சரிக்கை பலகை வைக்க படாததால் விபத்துக்கள் ஏற்படும் நாளை உள்ளது.

எனவே மந்தமான நிலையில் நடைபெறும் சாலை உருவாக்கும் பணிகள் விரைவாக முடிக்கவும். மேலும் சாலையோரம் பல்லடம் பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News