உள்ளூர் செய்திகள்
கோடை விளையாட்டு பயிற்சி முகாமில் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோடை விளையாட்டு பயிற்சி முகாம்

Published On 2022-05-26 09:41 GMT   |   Update On 2022-05-26 09:41 GMT
தஞ்சை அருகே பள்ளி மாணவர்களுக்கு கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:

தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு மற்றும் ஜெய்ஹிந்த் விளையாட்டு கழகம் இணைந்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தியது.

ஊரணிபுரம் ஜோதி அரசு பள்ளியில் நடந்த  இந்த விளையாட்டு பயிற்சி முகாமில் கராத்தே, டேக்ஹோண்டா, சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .பயிற்சி இறுதிநாளில் சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு சான்றிதழை தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் வழங்கினார்.

தேசிய துணைத் தலைவர் டாக்டர் எஸ்.பழனிதுரை மாணவ- மாணவிகளை பாராட்டிப் பேசினார். பயிற்சி முகாமை பயிற்றுநர் மணிகண்டன் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாணவ- மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள், பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News