உள்ளூர் செய்திகள்
திருவிழாவில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

தில்லை காளியம்மன் கோவில் திருவிழா

Published On 2022-05-26 09:35 GMT   |   Update On 2022-05-26 09:35 GMT
சுவாமிமலை அருகே தில்லை காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
சுவாமிமலை:

சுவாமிமலை அருகே உள்ள பாபுராஜபுரம் மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோவில் 25ஆம் ஆண்டு காளி திருநடன திருவிழா நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. மேலும் கரகம் , திருநடன  புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தன.

விழாவில் நாளை கோவில் வந்து அடைதல் நிகழ்ச்சியும், 29-ந் தேதி மாலை மஞ்சள் நீராட்டு விழா உற்சவ அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சியும்நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News