உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆண்டில் 201 போக்சோ வழக்குகள் பதிவு

Published On 2022-05-24 07:00 GMT   |   Update On 2022-05-24 07:00 GMT
மாநகரில், கடந்த 2013 முதல் 2022 ஏப்ரல் வரை 231 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

திருப்பூர்:

டாலர் சிட்டியான திருப்பூரில், பலதரப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். இங்கு குழந்தைகள், சிறார்கள் மீது பாலியல் அத்துமீறல் ஏதாவது ஒரு வகையில் நடக்கிறது. இது போலீசாரின் பார்வைக்கு செல்லும் போது குற்றவாளிகள் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் அன்றாடம் ஒரு வழக்காவது பதிவாகிறது. இதில் பாதிக்கப்படும் சிறுவர், சிறுமிகள் அனைவரும் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.

திருப்பூர் மாநகரில் கடந்த 2ஆண்டில் (2021 மற்றும் 2022 ஏப்ரல் வரை) 82 போக்சோ வழக்கு, புறநகரில் 119 வழக்கு என மாவட்டத்தில் மொத்தம் 201 வழக்கு பதிவாகியுள்ளது. 2 ஆண்டில் போக்சோ வழக்கில் 27 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மற்ற வழக்குகள் போலீஸ், கோர்ட்டு விசாரணையில் உள்ளது. மாநகரில், கடந்த 2013 முதல் 2022 ஏப்ரல் வரை 231 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இம்மாதத்தில் மாநகர் மற்றும் புறநகரில் 5 வழக்குகள் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News