உள்ளூர் செய்திகள்
ஓசூரில் வீட்டுக்குள் புகுந்து லேப்டாப், செல்போன்கள் திருடியவர் சிக்கினார்
ஓசூரில்வீட்டுக்குள் புகுந்து லேப்டாப், செல்போன்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரண்டபள்ளி பகுதியில் வசித்து வருபவர் சிவா (26) எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்துவீட்டில் வசிப்பவர் பாபு (47). இவர் தனியார் நிறுவன கேண்டீனில் வேலை செய்கிறார்.
இந்த நிலையில், நேற்று சிவாவின் வீட்டுக்குள் நுழைந்த பாபு, லேப்டாப் மற்றும் 2 செல்போன்களை திருடினார். உடனடியாக, சிவர அவரை கையும் களவுமாக பிடித்து ஓசூர் அட்கோ போலீசில் ஒப்படைத்தார். போலீசார் பாபு மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். அவர் திருடிய பொருட்களின் மதிப்பு ரூ.35,000 ஆகும்.