உள்ளூர் செய்திகள்
சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 7 வயது மகளை வீ்ட்டில் விட்டுவிட்டு தனது சொந்த ஊருக்கு சென்றார்.
வீட்டில் இருந்த சிறுமியின் தந்தையும் வேலைக்கு சென்றுவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி 17 வயது சிறுவன் ஒருவன் தனியாக இருந்த அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சிறுமியின் தந்தை வேலை முடிந்து வீடு திரும்பிய போது அவரது மகளுக்கு காய்ச்சல் இருந்தது. இதனால் அவர் சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
ஆஸ்பத்திரியில் சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.