உள்ளூர் செய்திகள்
திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2022-05-22 09:02 GMT   |   Update On 2022-05-22 09:02 GMT
குமாரபாளையம் பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
குமாரபாளையம்:

வைகாசி சனிக்கிழமையையொட்டி, குமாரபாளையம் பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
 
திருவள்ளுவர் நகர் தேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவில், குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சாமி கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர்  கோவில், ஜெய்ஹிந்த் நகர் தேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில், கோட்டைமேடு தேவி, பூதேவி சமேத தாமோதர சாமி கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. 

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News