உள்ளூர் செய்திகள்
புதிய வகுப்பறைகள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த அமைச்சர்

நெமிலி அருகே பள்ளி கட்டிடம் திறப்பு

Published On 2022-05-20 10:24 GMT   |   Update On 2022-05-20 10:24 GMT
நெமிலி அருகே பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
நெமிலி, மே.20-

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.17,32,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடத்தை அமைச்சர், ஆர்.காந்தி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். ராணிப்பேட்டை கலெக்டர்பாஸ்கரபாண்டியன, நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News