உள்ளூர் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியர் பலி
கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியர் பலியானார்.
திருச்சி:
திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பத்மநாபன் (வயது 47). இவர் முசிறி புள்ளியல் துறை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று சேருகுடி கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு சென்று, ஊர் திரும்பும் போது, வரும் வழியில் மழை பெய்ததின் காரணமாக முகத்தில் பட்ட சேற்றை கழுவுவதற்காக, அருகில் உள்ள கிணற்றில் இறங்கியுள்ளார்.
அப்போது நிலைதடுமாறி தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.