உள்ளூர் செய்திகள்
பனை ஓலை விசிறி விற்பனை அமோகம்

திண்டிவனத்தில் வறுத்து எடுக்கும் வெயில்- பனை ஓலை விசிறி விற்பனை அமோகம்

Published On 2022-05-19 11:17 GMT   |   Update On 2022-05-19 11:17 GMT
கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெயிலை சமாளிக்க பனை ஓலை விசிறியை நாடியுள்ளனர்.
திண்டிவனம்:

திண்டிவனம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள், சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெயிலை சமாளிக்க பனை ஓலை விசிறியை நாடியுள்ளனர். இதனால், திண்டிவனம் பகுதிகளில் பனை ஓலை விசிறி விற்பனை வெகு ஜோராக நடக்கிறது. ஒரு விசிறி 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Tags:    

Similar News