உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளுக்கு அதிக அபராதம்
மதுரையில் மோட்டார் சைக்கிளுக்கு கவனக்குறைவால் போக்குவரத்து போலீசார் அதிக அபராதம் விதித்தனர்.
மதுரை
மதுரை தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் ரவிக்குமார். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் தெற்கு வெளி வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த போக்குவரத்து போலீசார் வாகன பதிவு எண் வைத்து சோதனை செய்தபோது விதிமீறல் தொடர்பாக அபராதம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளனர்.
இதையடுத்து ரவிக்குமார் போக்குவரத்து போலீசாரின் இணையதளத்தில் சென்று பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி வினோதமான முறையில் அபராத கட்டணம் விதித்திருப்பது தெரியவந்தது. இதைப்பார்த்து ரவிக்குமார் திகைப்படைந்தார்.