உள்ளூர் செய்திகள்
வெம்பாக்கம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
வெம்பாக்கம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த, நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மனைவி மாரி வயது 45, இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார்.
இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் காணப்பாட்டார்.
கடந்த13ம்தேதி வீட்டிலிருந்த பயிருக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
அவரை மகன் கிருஷ்ணமூர்த்தி மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த மாரி சிகிச்சைபலனின்றி பரிதாபாமாக இறந்தார்.
இது சம்பந்தமாக கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் மீது பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.