உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெமிலி அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவன் சாவு

Published On 2022-05-19 09:53 GMT   |   Update On 2022-05-19 09:53 GMT
நெமிலி அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூர் கிராமத்தில் இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரஜினிகாந்த்.இவரது மகன் நாகராஜ் (வயது 9). 

சிறுவன் அங்குள்ள அரசு பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அதே பகுதியில் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது பாம்பு அவரை கடித்துள்ளது.

உடனடியாக வீட்டுக்கு சென்று தன்னை பாம்பு கடித்து விட்டதாக பெற்றோரிடம் நாகராஜ் கூறியுள்ளான்.பதறிப்போன அவர்கள் குழந்தையை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேேய சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News