உள்ளூர் செய்திகள்
தருமபுரி அருகே லாரி மோதி முதியவர் தலை நசுங்கி பலி
தருமபுரி அருகே லாரி மோதி முதியவர் தலை நசுங்கி பலியானார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது62). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சேலத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது தொப்பூர் அருகே தட்டமேடு என்ற இடைத்தில் வந்த போது நாமக்கல்லுக்கு கருவாடு ஏற்றி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சந்திரசேகர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது விபத்தில் பலியான சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.