உள்ளூர் செய்திகள்
.

தருமபுரியில் தொடர் மழையால் செடியிேலயே அழுகும் மல்லி பூக்கள்- விவசாயிகள் வேதனை

Published On 2022-05-19 09:12 GMT   |   Update On 2022-05-19 09:12 GMT
தருமபுரியில் தொடர் மழையால் செடியிேலயே மல்லி பூக்கள் அழுகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் கிராமப்புற பகுதிகளில் விவசாயத்தில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் தருமபுரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.  விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பூ பூக்கும் தருவாயில் உள்ள செடிகள் பெரும்சேதம் அடைகிறது.

இரவு நேரங்களில் கொட்டும் இந்த மழையால் பல இடங்களில் பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டது. மாவ ட்டத்தில் அதிக அளவில் மல்லி செடிகள் பயிரிட்டுள்ளனர். 
இந்த செடிகள் பூ பூக்கும் தருவாயில் இரவு நேரம் பெய்த மழையால் பூ பரிக்க முடியவில்லை.

 பூக்கள் செடியிலேயே அழுகி வருகிறது. இதனால் மல்லி செடிகள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பல ஏக்கர் கணக்கில் பயிரிட்டுள்ள விவசாயிகள்  வேதனை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News