உள்ளூர் செய்திகள்
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்வெழுதிய ஊராட்சி செயலாளர்கள்.

தேர்வு எழுதிய ஊராட்சி செயலாளர்கள்

Published On 2022-05-18 11:23 GMT   |   Update On 2022-05-18 11:23 GMT
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் செயலாளர்கள் தேர்வு எழுதினர்.
திருப்பரங்குன்றம்

தமிழக அரசின் நலத் திட்டங்களை கிராமங்களில் செயல்படுத்தும்ஊராட்சி செயலாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி தணிக்கை, கணினி பயன்பாடு, மின் ஆளுமை குறித்து ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நடைபெற்றது.

இதில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 32 ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கான தேர்வு திருப்பரங்கு ன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், ராமர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி, கண்ணன், காளியப்பன் ஆகியோர் முன்னிலையில் இந்த தேர்வு நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1 மணிவரை நடைபெற்றது. 

இதன்மூலம் ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி மன்றங்களின் செயல்பாடு உள்ளாட்சி துறைகளின குறித்த பொது அறிவு தொடர்பான விபரங்களை தெரிந்து கொண்டு அதற்கு அதற்கு தக்கபடி அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக இந்த தேர்வு நடத்தப் பட்டது.

 இதேபோல மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செய லா ளர்களுக்கு தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News