உள்ளூர் செய்திகள்
இண்டூர் அருகே எலி மருந்து சாப்பிட்ட தொழிலாளி சாவு
இண்டூர் அருகே எலி மருந்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
இண்டூர்,
தருமபுரி மாவட்டம் இந்தூர் அருகேயுள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 80). கூலித் தொழிலாளியான இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்த கிருஷ்ணன் 16-ந் தேதி எலிமருந்து தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கிருஷ்ணன் உயிரிழந்தார். இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.