உள்ளூர் செய்திகள்
.

இண்டூர் அருகே எலி மருந்து சாப்பிட்ட தொழிலாளி சாவு

Published On 2022-05-18 10:10 GMT   |   Update On 2022-05-18 10:10 GMT
இண்டூர் அருகே எலி மருந்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
இண்டூர், 

தருமபுரி மாவட்டம் இந்தூர் அருகேயுள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 80). கூலித் தொழிலாளியான இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்த கிருஷ்ணன்   16-ந் தேதி எலிமருந்து தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். 
அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கிருஷ்ணன் உயிரிழந்தார்.  இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News