உள்ளூர் செய்திகள்
சுரண்டை செண்பக கால்வாய் பகுதியில் எம்.பி. நேரில் ஆய்வு
சுரண்டை செண்பக கால்வாய் பகுதியில் தனுஷ்குமார் எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
சுரண்டை:
சுரண்டை செண்பககால்வாய் தூர்வாரும் பணி மற்றும் சிமெண்ட் கால்வாய் அமைத்திட முதல்-அமைச்சர் தலைமையில் சட்டசபையில் ரூ. 7½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த பணியை உடனடியாக நிறைவேற்றும் வகையில் நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தனுஷ்குமார் எம்.பி. நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பணியை விரைவில் நிறைவேற்றித் தருவேன் என தனுஷ்குமார் எம்.பி. உறுதி கூறினார்.
ஆய்வின் போது சுரண்டை நகர தி.மு.க. அவைத்தலைவர் சுப்பிரமணியன், கவுன்சிலர் பரமசிவம், வைகை கணேசன், சுப்பிரமணியன், சசிகுமார், தகவல் தொழில் நுட்ப அணி சுதன், நகர இளைஞரணி கோமதிநாயகம், பவுன்ராஜ், செல்வகுமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.