உள்ளூர் செய்திகள்
.

பாலக்கோடு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2022-05-17 10:11 GMT   |   Update On 2022-05-17 10:11 GMT
பாலக்கோடு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கந்துகாரன் செவத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது44). விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு  பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த வருடமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட வெங்கடேசன் வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News