உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர் மகன் திலீப் (வயது 24). இவர் அதே பகுதியில் பாட்டி வீட்டில் தங்கி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் திலீப் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.