உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

காட்பாடி அருகே ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2022-05-17 09:56 GMT   |   Update On 2022-05-17 09:56 GMT
காட்பாடி அருகே ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஜோலார்பேட்டை:

லத்தேரி காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அபபோது ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் மாநிறம் உடையவர் கத்திரிப்பூ கலர் முழுக்கை சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து உள்ளார். இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News