உள்ளூர் செய்திகள்
திருவிதாங்கோட்டில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
திருவிதாங்கோட்டில் மனைவியை ஆபாசமாக பேசியவர்களை தட்டிக்கேட்ட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு - 2 பேர் மீது போலீசார் வழக்கு
கன்னியாகுமரி:
திருவிதாங்கோடு கோயில் வட்டம் காலனியை சேர்ந்தவர் நாகராஜேஷ், தொழிலாளி.
இவரது மனைவியை அதே ஊரைச் சேர்ந்த வினு மற்றும் அண்ணாநகர் காலனியை சேர்ந்த சுஜின்ஆகியோர் ஆபாசமாக பேசினார்களாம். இதை நாக ராஜேஷ் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களி டையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு நாக ராஜேஷ் தனது வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வினு மற்றும் சுஜின் வந்தனர். அவர்களுக்கும் நாகராஜேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வினு உள்பட 2 பேரும் ஆபாசமான வார்த்தை களால் பேசி கையில் வைத்தி ருந்த வெட்டுக் கத்தியால் நாக ராஜேசின் முதுகு, வலது கையில் சரமாரி யாக வெட்டினர். படுகாய மடைந்த நாகராஜேஷ் சத்தம் போடவே இருவரும் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
வலியால் துடித்துக் கொண்டிருந்த நாக ராஜேசை உறவினர்கள் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் தக்கலை போலீசில் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.