உள்ளூர் செய்திகள்
காரை காணவில்லை.

கன்னியாகுமரியில் கார் திருட்டு

Published On 2022-05-17 06:47 GMT   |   Update On 2022-05-17 06:47 GMT
கன்னியாகுமரியில் கார் திருட்டு - போலீசில் புகார்
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கீழ ரத வீதியில் சலூன் கடை நடத்தி வருபவர் ஆறுமுகம் என்ற சுரேஷ் (வயது 48).

இவர் தனக்கு சொந்தமான சொகுசு காரை சம்பவத்தன்று பகல் கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைத்து விட்டு பூங்குளத்து விளையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இரவு பார்க்கும்போது அங்கு நிறுத்தி இருந்த காரை காணவில்லை.

அதனை யாரோ மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஆறுமுகம் என்ற சுரேஷ் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

கன்னியாகுமரி பகுதியில் இது போன்று அடிக்கடி மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் திருட்டு போவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News