உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி கே.ஆர். கல்லூரி வெள்ளி விழா
கோவில்பட்டி கே.ஆர். கல்வி மற்றும் அறிவியல் கல்லூரி வெள்ளி விழா நிகழ்ச்சி என்.இ.சி. கலையரங்கில் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கே.ஆர். கல்வி மற்றும் அறிவியல் கல்லூரி வெள்ளி விழா நிகழ்ச்சி என்.இ.சி. கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி தலைவர் சென்னம்மாள் ராமசாமி தலைமை தாங்கினார்.
கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாசலம் முன்னிலை வகித்தார். உயிர் வேதியியல் துறை பேராசிரியர் சுப்புராயலு வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மதிவண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார்.
பேராசிரியர் சாது சுந்தர்சிங் சிறப்பு விருந்தி னரை அறிமுகம் செய்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார.
மேலும, பல்கலைக்கழக தேர்வுகளில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவ- மாணவிகள் கல்லூரி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கல்வியில் சிறந்த மாணவர்கள் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி பரிசுகளை வழங்கினார்.
நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் சண்முகவேல், முதல்வர் காளிதாச முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார்.